preloader

News

புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

அகத்தியர் ஆன்மீக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு மற்றும் கலந்த ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகம் கேரளா புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மாநில பொறுப்பாளர்களையும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்களையும் ஏ.எஸ்.எப் இன் நிறுவனர் குருஜி முரளி மோகன் அவர்கள் நியமனம் செய்து சிறப்புரையாற்றினார், இந்தக் கூட்டத்தில் அமைப்பின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது, தமிழ்நாடு மாநில சங்கர குழு தலைவராக (இளைஞர்கள் பிரிவு) திரு சுனில் குமார் , நியமனம் செய்யப்பட்டார், புதுச்சேரி மாநில சங்கத் தலைவராக dr. சொக்கலிங்கம் ஐயா நியமனம் செய்யப்பட்டார்,கர்நாடக மாநில சங்க தலைவராக dr.சுரேஷ் கே நற்பவி நியமனம் செய்யப்பட்டார், தமிழ்நாடு மாநில அம்மையார் குழு (மகளிர் குழு)தலைவியாக திருமதி சுசீலா சிங்காரவேல் அவர்களும் செயலாளராக சேலம் dr.ரேணுகா அவர்களும் , கர்நாடக மாநில அம்மையார் குழு தலைவராக ரச்சநா சுஜாதா அவர்கள் நியமனம் செய்யப்பட்டார், தமிழ்நாடு மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக திரு ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டார், கேரளா மாநில கொள்கை பரப்பு செயலாளராக திரு சிவின் நியமனம் செய்யப்பட்டார், தமிழ்நாடு மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு ஏழுமலை ஐயா அவர்கள் நியமனம் செய்யப்பட்டார், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த திருச்சி வேல்முருகன் அவர்கள் இறுதியாக நன்றியுரை ஆற்றினார்
Share